Main Menu

இலகுவான சுவையான எல்லோருக்கும் பிடித்த தக்காளி சாதம் செய்வது எப்படி?

 இலகுவான  சுவையான  எல்லோருக்கும் பிடித்த தக்காளி சாதம்  செய்வது  எப்படி?

தேவையான பொருட்டுகள்

  • அரிசி -ஒரு கப் 
  • தக்காளி - 3
  • காஷ்மீரி  மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் 
  • மஞ்சள்-1/2 டீஸ்பூன்
  •  கரம் மசாலா தூள்-1டீஸ்பூன்
  • வெங்காயம் -2 (நறுக்கியது )
  • பச்சை மிளகாய் - 3 எண்ணம் 
  • கறிவேப்பிலை - தேவையான அளவு 
  • பெருஞ்சீரகம் விதைகள் - 1/4டீஸ்பூன்
  • பூண்டு-10 பல்

செய்முறை

முதலில் அரிசியை  (அல்லது ஏதேனும் சமையல் அரிசி) தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

அதன் பிறகு, அரிசியை ஒரு குக்கரில் 1  ½ கப் தண்ணீரில்  ஊற்றி மிதமான தீயில் மூன்று விசில் விட்டு வேக வைக்கவும்.

விசில் போனதும் , அரிசியை ஒரு அகலமான பாத்திரத்திற்கு மாற்றவும் 

அதன் பிறகு, ஒரு கடாயை எண்ணெய், நெய் சேர்த்து சூடாக்கவும் 1 டீஸ்பூன் எண்ணெய்,1 டீஸ்பூன் நெய்,½ டீஸ்பூன் கடுகு,கறிவேப்பிலை பெருஞ்சீரகம் விதைகள் சேர்க்கவும் 

பிறகு பொடியாக நறுக்கிய பூண்டு  பச்சை மிளகாயை நறுக்கி சேர்த்து வதக்கவும்.

அதன் பிறகு, நறுக்கிய வெங்காயம் சேர்த்துவதக்கவும்

பொடியாக நறுக்கிய தக்காளி, தேவையான உப்பு சேர்த்து  வதக்கவும்.

அதன் பிறகு, அனைத்து பொடிகளும் -காஷ்மீரி  மிளகாய் தூள் , கரம் மசாலா, மஞ்சள் மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்க்கவும் 

கடைசியாக இந்த கிரேவியை சமைத்த சாதத்துடன்  நெய் சேர்த்துக் கலந்து, குறைந்தது 10 நிமிடங்களாவது வேக  வைக்கவும் 

இப்பொது  சுவையான  தக்காளி சாதம் ரெடி  

Post a Comment

0 Comments