Main Menu

ருசியான பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி?

ருசியான பருப்பு உருண்டை குழம்பு செய்வது எப்படி?

 ருசியான பருப்பு உருண்டை குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

தேவையான பொருட்டுகள்

 

  • துவரம் பருப்பு -2 டீஸ்பூன்
  • காய்ந்த மிளகாய்-2 
  • பெருஞ்சீரகம்-¼  
  • சீரகம்-¼ 
  • தேங்காய் துருவல்- தேவையான  அளவு 
  • சின்ன வெங்காயம்-4 
  • பூண்டு- 10
  •   மஞ்சள்தூள்-1/4 டீஸ்பூன்
  •  கறிவேப்பிலை- தேவையான  அளவு 
  •  கொத்தமல்லி- தேவையான  அளவு  
  •  உப்பு - தேவையான  அளவு 
  • 1 டீஸ்பூன் - எண்ணெய்
  • தக்காளி -3
  •  பச்சை மிளகாய்-2
  •  தானியா தூள்-2 டீஸ்பூன் 
  • புளி -நெல்லிக்காய் அளவு

செய்முறை

கடலைப் பருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் ஒன்றாக இரண்டு மணிநேரம் வரை ஊற வைக்க வேண்டும். பின்பு தண்ணீரை வடித்துவிட்டு  அரைத்து கொள்ளவும் . பின் வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு பொடியாக நறுக்கவும்.
அதை அரைத்த பருப்புடன் சேர்த்து உருண்டையாக பிடித்து இட்லி பாத்திரத்தில் பத்து நிமிடம் வேகவைக்கவும் .
பின்பு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, கடுகு, உளுந்தப்பருப்பு, வெந்தயம் போட்டு தாளித்து கொள்ளவும். பின் வெங்காயம் ,தக்காளி போட்டு நன்கு வதக்கவும். கிரேவியாக வரும் வரை வதக்கவும்,

அதனுடன் மிளகாய் தூள், மல்லித்தூன் மஞ்சள் தூள், உப்பு போட்டு வதக்கி, அதனுடன் சோம்பும் சீரகத்தூள் சேர்த்து கிளறவும். தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அந்த நேரத்தில் வேகவைத்த உருண்டைகளை சேர்த்து  நன்றாக கொதிக்க விடவும்.

Post a Comment

0 Comments