Main Menu

தெருவே மணமணக்கும் கருவாட்டு கத்திரிக்காய் குழம்பு!

 தெருவே மணமணக்கும் கருவாட்டு கத்திரிக்காய் குழம்பு!அதன் வாசனைக்கே ஒரு தட்டு சாதம் அதிகமாக சாப்பிடுவார்கள். கருவாட்டு குழம்பை செய்து, மறுநாள் வைத்து சாப்பிட்டால், அதன் சுவையே வேறு லெவலாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

கருவாடு –  100 கிராம் 
சின்ன வெங்காயம் – 8
  தக்காளி – 2
 புளி – எலுமிச்சபழம் அளவு
மிளகாய் தூள் – 5 ஸ்பூன்
 தனி மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
எண்ணெய் –தேவையான அளவு 
கடுகு – டீ ஸ்பூன் 
உளுத்தம் பருப்பு – 1/2 ஸ்பூன 
உப்பு – தேவையான  அளவு 
தேங்காய் – அரைமூடி
கருவேப்பிலை – ஒரு கொத்து 
கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து 

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வரமிளகாய் சேர்த்து வறுத்து, பின் அத்துடன் சின்ன வெங்காயம், மல்லி தூள், சீரகம், மிளகு, கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.  பின்னர் அதனை குளிர வைத்து, மிக்ஸி அல்லது அம்மியில் போட்டு, அத்துடன் தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு கருவாட்டை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு மற்றொரு பாத்திரத்தில் அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அடுத்து அதில்  வேக வைக்க வேண்டும். அதில் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும். பின் அதில் புளிச்சாற்றினை ஊற்றி, நன்கு கொதிக்க விட வேண்டும். புளிச்சாறானது நன்கு கொதித்ததும், அதில் கருவாட்டை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான கருவாட்டு குழம்பு ரெடி!!!

Post a Comment

0 Comments