Main Menu

காளான் பிரியாணி இப்படி சுலபமா மிகச்சுவையா செஞ்சு அசத்துங்க

காளான் பிரியாணி இப்படி சுலபமா மிகச்சுவையா செஞ்சு அசத்துங்க

 தேவையான பொருட்கள்

  • பாசுமதி அரிசி -1 கப் 
  • காளான் - தேவையான அளவு 
  • பெரிய வெங்காயம் – 2
  •  தக்காளி – 3 
  • இஞ்சி - 2  நறுக்கியது 
  • பூண்டு – 6, 
  • பட்டை - 1
  •  சோம்பு - ஒரு டீஸ்பூன் 
  • கிராம்பு – 4 
  • மிளகாய் – 4 
  • மல்லித் தழை -  ஒரு கைப்புடி 
  • புதினா -ஒரு கைப்புடி  
  • ஏலக்காய் – 2 
  • எண்ணெய் –தேவையான அளவு
  • உப்பு - தேவையான அளவு 

செய்முறை 

*முதலில் ஒரு பாசுமதி அரிசியை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் கழுவிய பாசுமதி அரிசியில் 1 1/2 கப் நீரை ஊற்றி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 
* பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 2 டீஸ்பூன்  எண்ணெய் ஊற்றி சூடானதும், 2 கப் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி ஒரு பௌலில் எடுத்து வைக்க வேண்டும். 
* பின்பு ஒரு பாத்திரத்தில் காளான், தயிர்,  தக்காளி,  வதக்கிய வெங்காயம், புதினா, கொத்தமல்லி, இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 
* பிறகு அதே பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய்,  சீரகம், சோம்பு சேர்த்து வதக்க வேண்டும். 
* பின் அதில் ஊற வைத்துள்ள காளானை சேர்த்து, அத்துடன் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி நன்கு  வதக்க வேண்டும். காளான் நன்கு நீர் விட்டு வெந்ததும், அதில் ஊற வைத்துள்ள பாசுமதி அரிசியை நீருடன் சேர்த்து கிளற வேண்டும். 
* உலை நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, மூடி வைத்து குறைவான தீயில் வைத்து 20 நிமிடம் வேக வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து, அடுப்பை அணைத்துவிட்டு மீண்டும் 20நிமிடம் அப்படியே  வைக்கவும் . 
* பின் மூடியைத் திறந்து, அதில் மீதமுள்ள வதக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லியைத் தூவி, மேலே ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி ஒருமுறை கிளறினால், காளான் பிரியாணி தயார்.

Post a Comment

0 Comments